டெல்லி : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை appeared first on Dinakaran.